Monday, December 31, 2012
Tuesday, December 18, 2012
Tuesday, October 2, 2012
அகிம்சை
"நம்ம ஒன்னும் காந்தி இல்ல நாட்டைத் திருத்த"
திரைப்பட வசனம் போல் தொணித்தாலும் உண்மையில் பலர் மனதிலும்,சிலர் உதடுகளிலும் வாழும் சொற்றொடர் இது.
காந்தியும் அகிம்சையும் பிரிக்க முடியாத தம்பதி.
இன்று தான் அகிம்சை என்னும் சொல் நாட்டில் அதிகம் ஒலிக்கிறது.
துருபிடித்துப்போன அதனை,வருடத்திற்குச் சிலமுறை மட்டும் தூசிதட்டும் நாளிதழ்களும்,தலைவர்களின் சொற்பொழிவுகளும்,அறிக்கைகளும் நமக்குள் பல கேள்விகள் எழுப்புகிறது.
இன்றைய தேதியில்,
அகிம்சை என்றால் என்ன?
அது எவ்வாறு புரிந்துகொள்ளப்பட்டுள்ளது?
அகிம்சைவாதி என்பவன் யார்?
சராசரி மனிதனின் மனதில் அது எப்படித் தெரிகிறது?
"ஒரு பிரச்சனை வந்தால் அதில் இருந்து ஒதுங்கிவிடுவோம்.
தேவையில்லாத வேலை நமக்கேன்.
எவனும் சரியில்ல.நமக்கு மட்டும் என்ன அக்கறை.
அகிம்சையா வாழறது தான் நம்ம வேலை."
இதுவே நம்மில் பலருக்கு அறவழி.
இதுவும் காந்தியின் அகிம்சையும் ஒன்றா?
ஆராய்ந்து பார்த்தால்,ஆயிரம் வேறுபாடுகள்.
காலத்திற்கு ஏற்றார்போல் மாறுகிறது என்றால்,உலகின் மிக அதிவேகமான பரிணாம வளர்ச்சி கண்டது,அகிம்சையாகத்தான் இருக்கமுடியும்.
நம் சுயநலத்திற்காக ஒரு கருத்தின் அடிப்படையினை முற்றிலும் மாற்றிப் புரிந்துகொள்கிறோம்.நம் வசதிக்கு அதனை வளைக்கிறோம்.
நான்,எனது என்ற எண்ணம் அகிம்சையினை "பயந்தாங்கொள்ளித்தனம்", "பச்சோந்தித்தனம்" ஆகியவையுடன் சமன் செய்கிறது.
இன்னும் சொல்லப்போனால் உண்மை அகிம்சை இன்று வன்முறையாக பார்க்கப்படுகிறது.வன்முறைகள் போராட்டமெனும் போர்வையில் ஒளிந்துகொள்கிறது.
மனிதனின் ஒரு சிறந்த கொள்கையும்,மனிதனைப் போலவே மரித்திடுமோயென்று வருந்துகிறேன்,அஞ்சுகிறேன்.
அகிம்சை மீண்டும் உயிர்பெற வேண்டுமென்றால்,முதலில் அதை நாம் முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும்.
அகிம்சை என்பது,
ஒரு உணர்வு.வாழ்வின் ஒரு அங்கம்.
தனி மனிதனின் ஒழுக்கம்.
சமூகத்தின் அடையாளம்.
உரிமைக்காக போராடுவதும்,
மனஉறுதியுடன் வாழ்வதும்,
தன் தவறுகளை உணர்ந்து திருத்திக்கொள்வதிலும்,
பிறர் தவறுகளை அவர் மனம் புண்படாமல் சுட்டிக்காட்டுவதிலும்,
அவர் அதனைத் திருத்த வாய்ப்பளிப்பதும்,
தன் மனத்திற்கு உண்மையானவனாய் இருப்பதும்,
எல்லோருக்கும் நன்மையே நினைப்பதும்,
இவை அனைத்துமே அகிம்சை.
உணர்ந்திடுவோம்.உணர்த்திடுவோம்.அதன்வழி நடந்திடுவோம்.
......கந்தசுவாமி..........
Saturday, July 28, 2012
அர்த்தமில்லை
Wednesday, June 27, 2012
பறவையும் மின்விசிறியும்
Saturday, June 16, 2012
சிலை கொடுத்த மன்னன்
உளியைப் பிடித்தே,
கற்கள் உடைத்தான்.விரல்கள் சலித்தது.
வலியால் துடித்தது.
வியர்வைப் பேரருவி,
உடலெலாம் வழிந்தும்,
கலையின் தாகம்,
தீராமல் தவித்தான்.
சிரமம் பொறுத்து,
சிற்பம் வடித்தான்.
வேடிக்கை....
சிலை கொடுத்த மன்னனை,
புத்தகங்கள் எல்லாம்,
புகழ்பாடிப் போற்றுகின்றது.
.............கந்தசுவாமி...........
Friday, April 20, 2012
ரசிகன்
Tuesday, April 17, 2012
Wednesday, April 4, 2012
பிச்சை
Tuesday, March 27, 2012
பேச விடுங்களேன்

Saturday, March 17, 2012
மன்னிப்பு
இது நம்ம வேலையில்ல

'அந்த கார் வந்த போக்கே சரியில்ல.'
"என்ன இருந்தாலும் வண்டில வந்தவரு கொஞ்சம் கவனிச்சு இருக்கலாம்.கார் காரணுங்க இப்படித்தான் கண்ணு மண்ணு தெரியாம ஓட்டுவாங்க."
"1995க்கு அப்புறம் இப்பத்தான் இப்படி ஒரு விபத்த நேர்ல பாக்குறன்.நாளுக்கு நாள் நாடு மோசமாயிட்டே போகுது."
ஆளுக்கு ஒரு வசனம் சொல்லிக் கொண்டிருந்தார்கள் அடிபட்டவனைச் சுற்றி நின்று கொண்டு.
"ஒரு 30-35 வயசு இருக்கும்.தலையில நல்ல காயம்.சீக்கிரம் வாங்க."
ஒரு பெரியவர் தன் செல்பேசியில்,108 தொடர்பாளரின் உறக்கம் கலைத்து,உரக்க பேசிக்கொண்டிருந்தார்.
ஒரு பழைய மாருதி கார்,அடிபட்டுக் கிடந்தவரை விட அதிகம் சத்தம் போட்டுக்கொண்டு வந்தது.அதிலிருந்து இருவர் இறங்கினர்.
"நான் பக்கத்து ஊர் போலீஸ் இன்ஸ்பெக்டர்.என்ன ஆச்சு" அட்டையை நீட்டியபடி வினவினார்.
உடனே அனைவரும் சற்று பின்வாங்க,அனைவரின் முகத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டிருந்த டீக்கடை உரிமையாளர்,நடந்ததைச் சொன்னார்.
"ஒரு கார் காரன் காட்டான் மாதிரி வந்தான் சார்.இவரு ஒழுங்காதான் வந்தாரு.இடிச்சிட்டு நிக்காம போயிட்டான் பாவி.பத்து நிமிஷம் இருக்கும் நடந்து"
"அந்த கார் நம்பர் குறிச்சீங்களா?"
"அது வந்த வேகத்துல எங்க சார் நம்பர் எல்லாம் பாக்க."
"சரி.கார் எப்படி இருந்துது பாக்கறதுக்கு?"
"கறுப்பு வண்டி சார்.நல்ல மலமாடு மாரி பெருசா இருந்துச்சு." கடைக்காரர் முடிக்க,
"தண்ணி போட்டுட்டு ஓட்டிட்டு வந்தான்னு நெனைக்குறன்.தாருமாரா வந்தான்"
தன் விசாரணை அறிக்கை அளித்தான் ஒரு மேதாவி.
"ஹைவேயில வண்டி ஓட்டும்போது இவரு தான் சார் பத்திரமா வரணும்"
போன் பெரியவர் சொன்னார்.
"கொஞ்ச நேரம் சும்மா இருங்கய்யா".இது கான்ஸ்டபிள்.
108 தன் ஒலியை எழுப்பியவாறே அதிகாலை வேளையில் உறங்கிக் கொண்டிருந்த நாய்களையும் பறவைகளையும் எழுப்பிவிட்டு வந்தது.
காயமடைந்தவர் அவசரமாய் அவசர ஊர்தியில் ஏற்றப்பட,சைரன் ஒலி மீண்டும் எழும்பியது.
அனைவரும் அவரவர் வேலையைப் பார்க்க கிளம்பினர்.
...................................
"யோவ் உனக்கு என்ன சர்க்கரை வியாதியா?பத்து நிமிஷத்துக்கு ஒருதடவ வண்டிய ஓரங்கட்ட சொல்ற".கான்ஸ்டபிளைக் கடிந்த அதிகாரியிடம்,
"ரொம்ப தண்ணி குடிச்சிட்டன் சார்.அதான்."
"வாய்யா சீக்கிரம்"அவர் கத்த,
"சார் அந்த கறுப்பு ஹம்மர் கார்ல ஹைவேஸ் ஓரத்துல நிறுத்தி தண்ணி அடிக்குறாங்க சார்."
பதிலுடன் சேர்த்து பத்தடி தூரத்தில் நடக்கும் கேடையும் சொன்னார் கான்ஸ்.
"விடுய்யா.நாம இப்போ டூடில இல்ல.அப்படியே போய் கேட்டாலும் அமைச்சர்,அது,இதுனு பேசுவாங்க.சீக்கிரம் ஊர் போய் சேரணும்.கண்டுகாம வா போவோம்.இது நம்ம வேலையில்ல."
20 நிமிடங்களுக்கு முன் நடந்தது அதிகாரி அவர்களுக்கு நினைவுக்கு வந்தது.
....................கந்தசுவாமி.............



