Sunday, June 26, 2011

குழந்தைத் தொழிலாள‌ர்

குழந்தைத் தொழிலாள‌ர் வருமானம்,
பெற்றோருக்குப் பெருத்த அவமானம்...
அழகான வரிகளை எழுதிக் கொண்டிருந்தான்,
அழுக்கான உடையில் ஒருவன்...
விளம்பரப் பலகை எழுதிடும்,
விடியாத இரவுடைய‌ சிறுவன்...
........கந்தசுவாமி...........

திருக்குறள்

மதித்துப் போற்ற வேண்டிய குறள்,
மதிப்பெண் கருவியாய் மட்டும் உள்ளது.
வருந்தாதீர் வள்ளுவரே...
வருகிறது மாற்றம்...
....கந்தசுவாமி.....

Saturday, June 18, 2011

சாக்கடை குழாய்

சிமெண்ட் குழந்தைகளுள் நான் பாவம்.
சாக்கடை குழாயாய் எனக்கு சாபம்.
புதைபடும் நாளினை எண்ணிணேன்.
இதையென் விதியென்று விம்மிணேன்.
அரசால் விமோசனம் வந்தது.
திட்ட‌ம் பாதியில் நின்றது.
ப‌த‌வி உய‌ர்வும் பெற்று விட்டேன்!
க‌த‌வுக‌ள் ம‌ட்டுமே குறை.
ம‌ற்ற‌ப‌டி நானும் வீடு தான் இன்று!
.............க‌ந்த‌சுவாமி.........

தமிழ் வாழ்க‌


வழும் நீராய் தகிக்கும் நெருப்பாய்,

நிமிரும் வானாய், நிலமாய் காற்றாய்,

அமிழ்தாய் அழகாய், நிறைவாய் தெளிவாய்,


வாய்மை பண்பில், தூய்மை அன்பில்,

வாழ்கை எல்லாம் வண்ணம் தெளிக்க,

வருதமிழே..!! தருக வளமே..!!
.........கந்தசுவாமி...........