Saturday, July 28, 2012

அர்த்தமில்லை


காற்றைக் கிழித்திட பயந்திடும் விமானம்,

தண்ணீர் நனைக்கத் தயங்கிடும் படகும்,

நெருப்பைத் தீண்டிட மறுத்திடும் திரியும்,

நிலத்தைப் பிளந்திட மறந்திடும் விதையும்,

முயற்சி செய்யாமல் மடிந்திடும் மனிதனும்,

இருப்பதற்கு அர்த்தமும் இல்லை.

இறந்தால் வருத்தமும் இல்லை.

........கந்தசுவாமி..........