இலையுதிர் காலம்.
இளவெயில் நேரம்.
இருவிழி ஓரம்,
சிறுதுளி ஊரும்.
பழகிய காலம்.
அழகிய காலம்.
நினைவுகள் தீண்டும்.
மறுபடி வேண்டும்.
சிரித்து சிரித்து சிறகுகள் விரித்தோம்.
விரித்து விரித்து வெற்றிகள் பறித்தோம்.
கிண்டலும் கேலியும்,
கிண்டிடும் ஞாபகம்.
எண்ணங்கள் யாவையும்,
நண்பனின் பூமுகம்.
கண்களில் அதிகம் பேசிக் கொண்டோம்.
கனவினில் கரங்கள் கோர்த்துக் கொண்டோம்.
எனக்கென இருக்கிறாய்,
மனதினில் வசிக்கிறாய்.
திரைகளும் திறந்திடும்,
விரைவினில் விடிந்திடும்.
.......கந்தசுவாமி..........
Monday, September 19, 2011
Thursday, September 1, 2011
மின்னல்
கண்கள் கொஞ்சம் கூசும்,
விண்ணில் வெளிச்சம் பூசும்.
விஞ்ஞான உலகம் எல்லாம்,
வியந்தே தினம் புலம்பும்.
கேள்விகள் பல எழும்பும்,,
கேவும் மூளை குழம்பும்.
அழகான கிறுக்கல் சித்திரம்,
அதில்தான் வகைகள் எத்தனை.
வானுக்கும் பூமிக்கும் பாலமாய்,
வானத்தின் மேகத்தில் தூதனாய்,
ஆலமர விழுதுபோல் இணைந்தும்,
ஆகாயப் பந்துபோல் தெரிந்தும்,
வித்தைகள் காட்டும் தந்திரன்.
மின்னேற்றம் கொண்ட மந்திரன்.
தூரத்தில் கவனங்கள் ஈர்ப்பவன்..
தூறிடும் மழையின்கை கோர்ப்பவன்.
இடிக்கும் முகில்களின் இடையே,
இடியின் மூத்தவனாய் பிறப்பவன்,
மூடுவான் மூத்தவர் பார்வையென்று,
மூடத்தனம் ஒன்றும் இங்குண்டு.
அழிவும் ஆக்கமும் கொண்டவன்.
அனுபவம் அதிகமே கண்டவன்.
இயற்கையோ இறைவனோ எதுவென்று தெரியவில்லை.
இன்றுவரை முழுதாக யாருக்கும் புரியவில்லை.
.........கந்தசுவாமி........
Subscribe to:
Posts (Atom)