Sunday, January 29, 2012

காதல்

உலகிற்கு உயிரளித்து,

உயிருக்கு உணவளித்து,

கனவின் கரம்பிடித்து,

நனவினை நகர்த்திச் செல்வது..

.......கந்தசுவாமி............

Monday, January 23, 2012

பேனாவின் வெட்கம்


அக்கம் பக்கம்,
யாருமில்லா நேரம்,
பக்கம் பக்கமாய்,
கவிதை எழுதும்,
என் பேனா,
பக்கம் நீ வந்ததும்,
வெட்கப்பட்டு நெளிகிறதே!!!
.....கந்தசுவாமி.........

Thursday, January 19, 2012

நம்பிக்'கை' துணை

தண்ணீரில் தத்தளிக்கும்போது,
கைகொடுத்து உதவாது,
தானாகக் கரைசேர்ந்தபின்,
கைகுலுக்கி பாராட்டும் உலகமிது.
.........கந்தசுவாமி............

Tuesday, January 17, 2012

முத்தவரி


உன் சிரிப்பு,

என் வருவாய்.

வரி செலுத்தட்டுமா அதற்கு?

நித்தம் நானும் முத்தத்தால்!!

....கந்தசுவாமி......

Saturday, January 14, 2012

எல்லாம் நலம்


தினமும் காலை சூரியனுக்கு,
வணக்கம் சொல்வதை,
வழக்கம் செய்.
திணறும் சாலை பூக்களுக்கு,
புன்னகை பூக்க,
தண்ணீர் பெய்.
இரசித்திட ஆயிரம் உண்டு.
இரசிப்போம் நாமும் நின்று.
சிரமங்கள் யாவர்க்கும் உண்டு,
சிரித்தே செல்வோம் நன்று.
பாதை இருளினில்,
பாதி விலகிடும்,
பார்வை தெளிவாய் இருக்கையிலே.
வேரில் உழைப்பின்,
வேள்வி எழுப்பிடு,
வாழ்வு சுவைத்திடும் தினம்தினமே.
....கந்தசுவாமி......