Monday, March 28, 2011

கூட்டணி ஆட்சி


உடலின் உறுப்புகளுக்குள் தேர்தல்.
கைகளின் பிரச்சாரம்,
எடுப்பதும் கொடுப்பதுமாய் இருக்க,
கால்களின் பிரச்சாரம்,
நடப்பதும் சுமப்பதுமாய் இருந்தது.
கண்டதை முன் வைத்து,
கண்களின் அறிக்கை.
சொன்னதை சொல்லிற்று,
வாய் அதன் உரையில்.
முகர்ந்ததை,முரைத்ததை,
மூக்கது முன் வைத்தது.
கேட்டதை வைத்தது,
காதுகள் வாக்கு கேட்டன.
மக்கள் போல் குழம்பிய மனம்,
கூட்டணி ஆட்சி கொண்டு வந்தது.
........கந்தசுவாமி.......

Wednesday, March 23, 2011

கடவுளைக் காணும் வழி


தனியாய் இருக்கும்,
பொதுவான கடவுளைக் காண,
தனி வழி,
பொது வழி ஏனோ?
......கந்தசுவாமி............

Tuesday, March 22, 2011

கவிதை

காயங்கள் ஆற்றும் கவிதை.
மாயங்கள் செய்யும் கவிதை.
இன்பம் தெளிக்கும் கவிதை.
இண‌க்கம் அளிக்கும் கவிதை.
கனவில் நிஜமே கவிதை.
கார்முகில் வானம் கவிதை.
காதல் மொழியும் கவிதை.
கதறல் வலியும் கவிதை.
என்றும் இனிக்கும் கவிதை.
எனக்குள் எரியும் கவிதை.
.......கந்தசுவாமி........