Monday, March 28, 2011

கூட்டணி ஆட்சி


உடலின் உறுப்புகளுக்குள் தேர்தல்.
கைகளின் பிரச்சாரம்,
எடுப்பதும் கொடுப்பதுமாய் இருக்க,
கால்களின் பிரச்சாரம்,
நடப்பதும் சுமப்பதுமாய் இருந்தது.
கண்டதை முன் வைத்து,
கண்களின் அறிக்கை.
சொன்னதை சொல்லிற்று,
வாய் அதன் உரையில்.
முகர்ந்ததை,முரைத்ததை,
மூக்கது முன் வைத்தது.
கேட்டதை வைத்தது,
காதுகள் வாக்கு கேட்டன.
மக்கள் போல் குழம்பிய மனம்,
கூட்டணி ஆட்சி கொண்டு வந்தது.
........கந்தசுவாமி.......

No comments:

Post a Comment