Saturday, August 6, 2011

தாய்ப்பால்


மருத்துவம் அதன் மகிமையை சொல்கிறது.
கருத்துகள் அதை ஆதரித்து செல்கிறது.
உயிருக்குள் உயிர் வளர்த்து காப்பவள்,
உணவினை அவ்வுயிர்க்கு உறுதியாய் தரட்டும்.
பயன்கள் அளிக்கும் பரஸ்பரம்.
பயிர்க்கு அன்னை பராபரம்.
தாய்மையின் கடமை.
சேய்க‌ளின் உட‌மை.
மறுப்பதும் வெறுப்பதும்,
மனிதனாய் இருப்பதும்,
ஈதவள் விருப்பு.
ஈடிலா பொறுப்பு.
.......கந்தசுவாமி........

Wednesday, August 3, 2011

ந‌ன்மைக‌ள்

துரத்திடுவோம் கனவுகளை...
துயில்மறந்த கண்களால்...
தொடர்ந்திடும் நம்மையே,
தொகையாய் ந‌ன்மைக‌ள்...
....க‌ந்த‌சுவாமி.....