Sunday, November 13, 2011

விடுப்பவன் எவன்?


ற்களும் கடல்களும்,
புற்களும் பூகம்பமும்,
புதிர்தான் எல்லாம்,
புவியின் மேலே.
அவிழ்ப்பவன் மனிதன்.
விடுப்பவன் எவன்?
சலிக்காமல் முளைக்கும்,
சந்திரனும் சூரியனும்,
ஆக்கவும் தாக்கவும்,
நீரும் நெருப்பும்,
நுரையீரல் நுழைந்து,
உயிர்தரும் காற்றும்,
சரிவிகிதக் கலப்பில்,
சரியும் தவறும்,
விரிவாக ஆராய்ந்து,
விடைவினான் மனிதன்.
விடுத்தவன் எவன்?
அணுவும் அதன்பிரிவும்,
அகிலத்தின் அளவும்,
முகிலுள்ளே இசையும்,
முழுவுடல் தசையும்,
விண்வெளி கோளும்,
மின்னொளி கோபுரம்,
வியாதிகள் விரட்டும்,
வியத்தகு மருந்தும்,
விரிவாக ஆராய்ந்து,
விடைவினான் மனிதன்.
விடுத்தவன் எவன்?
வேறுபடும் கருத்தால்,
மாறுபடும் அறுதியிடல்,
அளிக்கிறது உலகம்.
இறைவனென ஆத்திகன்,
இயற்கையென நாத்திகன்.
.....கந்தசுவாமி.....

Sunday, November 6, 2011

இப்படியும் சிலர் வாழ்க்கை


வாகன ஒலியே வானொலி.
வானத்து நிலவே காதலி.
தெருக் குழாய் கங்கை.
தென்றலே பட்டுப் போர்வை.
சொத்துகள் எதுவும் இல்லை.
சொந்தங்கள் எங்கும் இல்லை.
காலனை விரைவில் எதிர்பார்த்து,
காலம் காலமாய் காத்திருந்து,
இருக்கும் ஒரு வாழ்க்கை...
இப்படியும் சிலர் வாழ்க்கை..
.........கந்தசுவாமி..........