Tuesday, October 18, 2011

உள்ளத்தில் தீ மூட்டு


விழுந்திடும் அருவிகள் அழுவதில்லை.
தொடர்ந்திடும் நதியென கடலைத்தேடி.
நேரம் என்ன காலம் என்ன‌
உழைக்கும் வேளையில்.
தூரம் என்ன தூக்கம் என்ன‌
கனவின் பாதையில்.
வெள்ளைத் தாள் தான் வானம் அதிலே
வண்ணம் தீட்டுவோம்.
உள்ளம் எங்கும் உண்மை என்னும்
தீயை மூட்டுவோம்.
விதியின் சதிகள் மதியால் வெல்வோமே.
வினை யாவிலும் துணை
துணிவென்ற ஒன்றாமே.
சிரமம் அது சிறை இல்லை,
சிகரம் தொட படி தானே.
கவலை மறந்து,
கதவு திறந்து வா.
குறைகள் ஊர் நூறு சொல்லும்.
மறைவாய் போர் செய்து கொல்லும்.
நிறைகள் நீ கண்டு கொண்டால்,
நிறைவாய் நம் பேரைச் சொல்லும்.
முயன்றால் முடியும்,
முழுதாய் விடியும் இரவும்.
தடைகள் உடையும்,
தலையும் நடையும் நிமிரும்.
.....கந்தசுவாமி..........