காற்றைக்
கிழித்திட பயந்திடும் விமானம்,
தண்ணீர்
நனைக்கத் தயங்கிடும் படகும்,
நெருப்பைத்
தீண்டிட மறுத்திடும் திரியும்,
நிலத்தைப்
பிளந்திட மறந்திடும் விதையும்,
முயற்சி
செய்யாமல் மடிந்திடும் மனிதனும்,
இருப்பதற்கு அர்த்தமும் இல்லை.
இறந்தால்
வருத்தமும் இல்லை.
........கந்தசுவாமி..........
No comments:
Post a Comment