Saturday, June 16, 2012

சிலை கொடுத்த மன்னன்


உளியைப் பிடித்தே,
கற்கள் உடைத்தான்.
விரல்கள் ச‌லித்தது.
வலியால் துடித்தது.
வியர்வைப் பேரருவி,
உடலெலாம் வழிந்தும்,
கலையின் தாகம்,
தீராமல் தவித்தான்.
சிரமம் பொறுத்து,
சிற்பம் வடித்தான்.
வேடிக்கை....
சிலை கொடுத்த மன்னனை,
புத்தகங்கள் எல்லாம்,
புகழ்பாடிப் போற்றுகின்றது.
.............கந்தசுவாமி...........

No comments:

Post a Comment