Saturday, March 17, 2012

மன்னிப்பு


மனிதன் இருக்கும் வரையிலும்,
மண்ணில் இதற்கு மரணமில்லை.
நொடியெல்லாம் புவிமீதே,
ஒடிந்தமனம் ஒட்டுமிது.
பெறுகையில் இனிக்கும்,
தருகையில் கசக்கும்.
கோருபவன் கோவாகிறான்.
கொடுப்பவன் இறையாகிறான்.
.............கந்தசுவாமி.......

No comments:

Post a Comment