
இழப்புகள் இழிவுகள் குவிகையில்
இதழ்கள் விரிக்கச் சொல்கிறான்..
கவலை வலையில் கசங்கினாலும்
சிணுங்காமல் சிரிக்கச் சொல்கிறான்..
புக்தியில் புந்தியும் புண்படுகையில்
புன்னகை பூக்கச் சொல்கிறான்..
தனிமை துவட்டித் துவைத்தாலும்,
தளராமல் தகர்க்கச் சொல்கிறான்..
தன்னாட்கள் பிறருக்காக வாழ்வதில்,
தன்னிறைவு கொள்ளச் சொல்கிறான்.
பிறர் அவனைப் பித்தனாய் சித்தரிக்க,
அவன் பிறரை மனிதனாக்க முயல்கிறான்.
..........கந்தசுவாமி.....
No comments:
Post a Comment