Tuesday, July 5, 2011

எண்களில் காதல்


ஒரு நாள் அவளைக் கண்டேன்.
இரு இதயம் கலக்கக் கண்டேன்.
மூன்று காலம் மறந்து நின்றேன்,
நான்கு திசைகள் தொலைத்து நின்றேன்.
ஐம்புலன்கள் திறந்து கொண்டன.
ஆறரிவும் பறந்து சென்றன.
ஏழேழு ஜென்மங்கள் இணைந்திருந்து,
எட்டைப் போல் பிணைந்திருந்து,
ஒன்பது கிரகங்கள் தாவி விளையாடினாலும்,
பத்தாது கண்ணே என் காதலைச் சொல்லிட!!!!!!!!!!!!!
.............கந்தசுவாமி..................

4 comments: